61 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
முன்னறிவிப்பு இல்லாமல் தரகர் அழைத்து வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாருக்குச் சுடச்சுட ஜாங்கரியும் மெது வடையும் பரிமாறி உபசரித்தாள் கோகிலா.
‘நாம கொண்டு வந்தத நமக்கே பரிமாறும் இந்தம்மாவோட சாமர்த்தியத்தைப் பார்த்தீங்களா!’ கணவரிடம் கிசுகிசுத்த பெண்மணி, வீட்டில் கலந்துபேசிவிட்டு பதில் கூறுவதாகச் சொல்லி நழுவினாள்.
‘இப்படி வழவழகுழகுழன்னு பதில் சொல்லிட்டுப் போகவா திடுதிப்புன்னு கிளம்பி வந்தாங்க,’ முணுமுணுத்துக்கொண்டே, ஊறவைத்திருந்த அரிசியை இயந்திரத்தில் சேர்த்து, இட்லிக்கு மாவாட்டும் வேலையினை தொடர்ந்தாள் கோகிலா.


Please Comment Here