40 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பிரம்ம முகூர்த்த வேளையிலே, தேவர்கள் கணக்காய் புரோகிதர்கள் சேர்ந்து ஒரே சீராய் மந்திரங்களை ஜபிக்க, நூற்றுக்கணக்கான சொந்த பந்தங்கள் அட்சதை தூவி வாழ்த்த, என மகளைக் கன்னிகாதானம் செய்து கொடுத்த தாய் தந்தையரின் முகம் பூரிப்பில் விரிந்தது.
பிரசாதமாய் வந்த பல கோவில்களின் அர்ச்சனை குங்குமங்கள் அவற்றை மருமகளின் திருமாங்கல்யத்தில் இடச்சொல்லி மகனிடம் பக்தி பொங்க தந்தனர் அவன் பெற்றோர்.
பிங்க் வண்ண பிராக்குக்கும்(frock) பல்லை இளிக்கும் மஞ்சள் கயிறுக்கும் ஒத்துப்போகவில்லை எனத் தாலியை நகைப்பெட்டியில் பூட்டினர், நண்பர்கள் வரவேற்பு விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்த புதுமணத் தம்பதிகள்.
பின்குறிப்பு:
இதுவும் உண்மையைத் தழுவி எழுதிய கற்பனை கதை. நேரில் கண்டபோது மனத்திற்கு ரொம்ப நெருடலாக இருந்தது.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here